tag:blogger.com,1999:blog-5786218025055165669.post8433253511854062965..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : நேசித்து வாசிப்போம்... வாசித்து நேசிப்போம்...சுவாசம் உள்ள வரை...!தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-82957624361286752292014-10-08T08:36:50.172-07:002014-10-08T08:36:50.172-07:00புத்தகம் இது எனக்கு திறந்து விட்ட உலகை வேறு எதனாலு...புத்தகம் இது எனக்கு திறந்து விட்ட உலகை வேறு எதனாலும் ஈடு செய்ய முடியாது. படிப்பவரின் எண்ண ஓட்டத்திற்கேற்ப அதில் வரும் கதாபாத்திரங்களின் சொல்லும்,அசைவும் மனம் உருவகப்படுத்திவிடும் அற்புதம் சலனப் படங்களால் முடியாது.சிறு வயதில் படித்த படக்கதைகளின் நாயக நாயகியரின் படிப்பினைகளை பெற்றோர்களால் கூட பழக்கப் படுத்த முடியாது என்பது என் அனுபவம்( இந்தக் காலக் குழந்தைகளுக்கு இடியட் பாக்ஸ் எனும் தொலைக் காட்சியால் அந்தப் பலனைக் கொடுக்க முடியாது).ஒரு கட்டத்தில் படக் கதைகளைத் தாண்டி படிக்கத் தூண்டிய தமிழ்வாணன்(சங்கர்லால்)சுஜாதா,சாண்டில்யன்,நீதிக்கதைகள்,ஆங்கிலத்தில் பல நாவல்கள்,என படிப்பதில் வரும் இன்பத்தை அணு அணுவாக ரசித்து மனம் விரிந்தது.இதில் ஆன்மீகம் சார்ந்த படிப்புகள் இதிகாசங்களில் ஆரம்பித்து புராணங்களில் வளர்ந்து வாழ்வியல் வரை வந்தது ( இதிலும் ஆங்கிலப் புத்தகங்கள் அடக்கம் ).இன்னும் வாசித்தலைப் பற்றி மணிக்கணக்காக பேசுவேன்:)<br /><br />காலம் சிரித்தது படிப்பும் நின்றது. பேஸ் புக் மீண்டும் தவித்த வாய்க்கு ஒரு சொம்பு தண்ணீராய் கிடைத்தது உங்களைப் போன்றோரின் பதிவுகளால் என்றால் மிகையில்லை.நிறைய யோசிக்க குறைவாய் படிக்க என மனம் பழகிக் கொண்டது. எழுதியவரின் கருத்தை விட படிப்பவரின் எண்ணத்தை விரிவுபடுத்தும் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களால் நேசம் மரிக்காது எழுத்தின் மீதுள்ள காதல் உயிர்ப்புடன் மனதை அசை போட வைக்கிறது. என் மனதுக்குப் பிடித்த என்னுடனே வளர்ந்து என்னை வளர்த்த வாசிக்கும் பழக்கத்தைப் பற்றிய உங்கள் பதிவு simply nostalgic,நன்றி :)thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.com